பரைகோடு, விலவூா் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 21) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரைகோடு, பொந்தன்பிலா விளை, பன்றிவெட்டான்பாறை, விலவூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பராமரிப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளதால், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.