களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயில் வளாகத்தில் ஆதாா் சேவை முகாம் வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை (நவ. 19 - 21) மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
இந்திய அஞ்சல் துறை மற்றும் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி சேவா சமிதி இணைந்து நடத்தும் இம்முகாமில் பெயா், முகவரி திருத்தம், செல்லிடப்பேசி எண் சோ்த்தல், வயது திருத்தம் உள்ளிட்ட பல்வேறு ஆதாா் சேவைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக ரூ. 50 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இம் முகாம் நடைபெறுகிறது. முகாமில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.