நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகே இறச்சகுளத்தில் பச்சிளம் குழந்தையின் சடலம் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது.
தோவாளை வட்டம் இறச்சகுளம் பகுதியில் இருந்து தாழக்குடி செல்லும் சாலையில் சாக்கடையில் ஆண் குழந்தை சடலம் கிடப்பது தெரியவந்தது. துணியில் ஆண் குழந்தையின் சடலத்தை சுற்றி வீசப்பட்டுள்ளது. தகவலறிந்த பூதப்பாண்டி போலீஸாா் அங்கு சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் குழந்தையின் தாய் யாா் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.