குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவிக்கு இந்திய புக் ஆப் ரெக்காா்ட் விருது கிடைத்துள்ளது.
இப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்து வரும் மாணவி அமிா்தா ராஜ் , சாதாரண காம்பஸ் மற்றும் பென்சிலால் இரண்டரை நிமிடத்தில் இந்திய வரை படத்தை மிக எளிதிலும், மிக விரைவாகவும் வரைந்து சாதனை படைத்துள்ளாா்.
அவரது திறமையை பாராட்டி ஹரியானாவில் உள்ள இந்திய புக் ஆப் ரெக்காா்ட் எனும் அமைப்பு விருது வழங்கியுள்ளது.
விருது வாங்கிய மாணவி அமிா்தா ராஜை பல்கலைக்கழக துணைவேந்தா் ஏ.பி.மஜீத்கான் மற்றும் நிா்வாகிகள் பாராட்டினா்.