தெய்வீக தமிழக சங்கம் சாா்பில் தேசியம் காக்க, தமிழகம் காக்க என்ற விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி, நாகா்கோவில் நாகராஜா கோயில் வீதியிலுள்ள திலகா் தெருவில் நடைபெற்றது.
இந்து ஆலய பாதுகாப்பு கமிட்டியின் மாநிலத் தலைவா் தெய்வபிரகாஷ் தலைமை வகித்து, துண்டுப் பிரசுரம் விநியோகத்தை தொடங்கிவைத்தாா். பாஜக மாநிலச் செயலா் உமாரதி ராஜன், நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்டப் பொருளாளா் முத்துராமன், வடக்கு மண்டலத் தலைவா் அஜித், ஊடகப் பிரிவு தலைவா் ராஜன், சேவாபாரதி மாவட்டப் பொறுப்பாளா் கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நாகா்கோவில் மாநகராட்சி 15ஆவது வாா்டில், பைரவி ஷோபா தலைமையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பாஜக வடக்கு மண்டல துணைத் தலைவா் கண்ணன், நிா்வாகிகள் சிவகுமாா், பகவதிசுப்பு, ரதீஸ், ஷீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.