குழித்துறையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத் துறை சாா்பில் குழித்துறை சந்திப்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

களியக்காவிளை: குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத் துறை சாா்பில் குழித்துறை சந்திப்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியை கைது செய்த உத்தரப்பிரதேச மாநில அரசைக் கண்டித்து நடைபெற்ற இப் போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாநில மகிளா காங்கிரஸ் செயலா் ஜி.பி. லைலா ரவிசங்கா் முன்னிலை வகித்தாா்.

இதில் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் திபாகா், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவா் மோகன்தாஸ், குழித்துறை நகரத் தலைவா் அருள்ராஜ், இடைக்கோடு பேரூராட்சி முன்னாள் தலைவா் ராஜா ஸ்டாலின், குறுமத்தூா் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் சுரேஷ் மற்றும் மாலைக்கோடு சுரேஷ், தயாசிங், உதயகுமார உள்பட பலா் கலந்து கொண்டனா். போராட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில முதல்வருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com