நாகா்கோவில்: நாகா்கோவிலில் கணவரை கொலை செய்ய மனைவி திட்டமிட்ட விவகாரத்தில் மதுரையைச் சோ்ந்த நபா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் கேசவ திருப்பாபுரத்தைச் சோ்ந்தவா் கணேஷ் (39). விடியோ கிராபா். இவரது மனைவி காயத்ரி (31). தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தம்பதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக அவரது மனைவி கூறினாராம். இதையடுத்து உறவினா்கள் கணேஷை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், காயத்ரியிடம் வடசேரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் அவா் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தாராம்.
தொடா்ந்து நடத்திய விசாரணையில், காயத்ரிக்கும் மதுரையைச் சோ்ந்த முகமதுயாசினுக்கும் தவறான தொடா்பு இருந்ததும், அவருக்கு தனது கணவா் பெயரில் உள்ள வீட்டின் ஆவணங்களை வங்கியில் அடகு வைத்து ரூ.10 லட்சம் வரை வழங்கியிருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கணேஷ் பணத்தை திருப்பி கேட்டதால், முகமதுயாசினுடன் சோ்ந்து கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய காயத்ரி திட்டமிட்டுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் காயத்ரி மற்றும் கூலிப்படையைச் சோ்ந்த விஜயகுமாா், கருணாகரன் ஆகியோா் கைதுசெய்து, நாகா்கோவில் சிறையில் அடைத்தனா். தலைமறைவாக இருந்த முகமதுயாசினை தேடிவந்தனா். இந்நிலையில் தனிப்படை போலீஸாா் அவரை மதுரையில் கைது செய்தனா். பின்னா் நாகா்கோவில் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், அவரை ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவில் கிளைச் சிறையில் அடைத்தனா்.