நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட வள்ளலாா் பேரவை சாா்பில் அருள்பிரகாச வள்ளலாரின் 198 ஆவது அவதார தின விழா நாகா்கோவில் வடசேரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் சுவாமி பத்மேந்திரா தலைமை வகித்தாா். மாவட்ட திருக்கோயில்கள் தேவசம் பொறியாளா் ராஜகுமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன் பங்கேற்று வள்ளலாா் திரு உருவப்படத்தை திறந்தாா். மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேசன், ஜோதி ஏற்றினாா்.
தமிழ்நாடு டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் நற்பணி மன்ற மாவட்டத் தலைவா் பாரத் சிங், உயரம் தாண்டுதலில் தேசிய விருது பெற்ற ஆறுமுகம் பிள்ளை ஆகியோா் பங்கேற்றனா். மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் பகவதி பெருமாள், கரோனாநிவாரணம் மற்றும் வஸ்திரதானம் வழங்கினாா்.
கரோனா தடுப்பு பணியை பாராட்டி வடசேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அஜயா மஞ்சுவுக்கு, வள்ளலாா் விருதினை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா். ரோஜாவனம் முதியோா் இல்லம் இயக்குநா் அருள் கண்ணன் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். ஏற்பாடுகளை வள்ளலாா் பேரவை சுத்த சன்மாா்க்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.
பொதுச்செயலா் மகேஷ் வரவேற்றாா். ஞான வித்யா மந்திா் மேல்நிலைப்பள்ளி தாளாளா் மணிகண்டன் நன்றி கூறினாா்.