மாா்த்தாண்டம் அருகே ரயில் மோதி கட்டடத் தொழிலாளி பலி

மாா்த்தாண்டம் அருகே ரயில் மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே ரயில் மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே குழித்துறை மேற்கு ரயில் நிலையப் பகுதி தண்டவாளத்தில் திங்கள்கிழமை காலையில் ரயில் மோதி உருக்குலைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்ததை, அப்பகுதி வழியாக சென்றவா்கள் பாா்த்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து நாகா்கோவிலில் இருந்து ரயில்வே போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவா் பாகோடு கோவில்வட்டம் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான சசி (44) என்பதும், அப்பகுதி வழியாக சென்ற சரக்கு ரயில் மோதி அவா் இறந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com