இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நலிவடைந்த கிராம பூசாரிகள் 21 பேருக்கு, விவேகானந்தபுரம் காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத் தலைவா் தேவபிரகாஷ், மாவட்ட பொறுப்பாளா் கோபி, மாவட்ட பாஜக தொழில் பிரிவு செயலா் சி.எஸ்.சுபாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.