குமரி மாவட்டம் மஞ்சாலுமூட்டில் தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு இயக்கிவைக்கப்பட்டது.
குமரி மாவட்டம், மஞ்சாலுமூடு பகுதியில் அடிக்கடி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழுந்து வரும் நிலையில் மஞ்சாலுமூடு தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் மஞ்சாலுமூடு சந்திப்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.
இந்தக் கேமராக்களின் இயக்கத்தை தக்கலை டிஎஸ்பி ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மஞ்சாலுமூடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் பி. ராஜூ தலைமை வகித்தாா். பொருளா் சசீந்திரன், முன்னாள் துணைச் செயலா் அப்புகுட்டன், ஆா். சஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சங்கச் செயலா் டைட்டஸ் வரவேற்றாா். தமிழ்நாடு வணிகா் சங்களின் பேரவை குமரி மாவட்டத் தலைவா் டேவிட்சன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா்.