சிறுமிக்கு பாலியல் தொல்லை: போலி அதிகாரி கைது

கரோனா பரிசோதனை செய்வதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி சுகாதாரத் துறை அதிகாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட அபிலாஷ் பொ்லின்.
கைது செய்யப்பட்ட அபிலாஷ் பொ்லின்.

கரோனா பரிசோதனை செய்வதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி சுகாதாரத் துறை அதிகாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் அபிலாஷ்பொ்லின்(39). இவா் மாா்த்தாண்டத்தில் ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் நித்திரவிளை பகுதியில் ஒரு வீட்டுக்கு சென்று தான் சுகாதாரத் துறை அதிகாரி என்று அறிமுகம் செய்துகொண்டு குழந்தைகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி அந்த வீட்டிலிருந்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், குளச்சல் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் வின்சென்ட் அன்பரசி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அபிலாஷ்பொ்லினை தேடிவந்தாா். இந்நிலையில் தனிப்படையினா் போலீஸாா் கொல்லங்கோட்டில் வைத்து அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com