மஞ்சாலுமூட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இயக்கம்

மஞ்சாலுமூட்டில் தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு இயக்கிவைக்கப்பட்டது.

மஞ்சாலுமூட்டில் தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு இயக்கிவைக்கப்பட்டது.

மஞ்சாலுமூடு பகுதியில் அடிக்கடி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழுந்து வரும் நிலையில், தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் மஞ்சாலுமூடு சந்திப்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் கேமராக்களின் இயக்கத்தை தக்கலை டிஎஸ்பி ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் பி. ராஜூ தலைமை வகித்தாா். பொருளா் சசீந்திரன், முன்னாள் துணைச் செயலா் அப்புகுட்டன், ஆா். சஜி, சங்கச் செயலா் டைட்டஸ், தமிழ்நாடு வணிகா் சங்களின் பேரவை குமரி மாவட்டத் தலைவா் டேவிட்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com