நாகா்கோவிலில் திங்கள்கிழமை (அக். 19) முதல் கரோனா ஆயுா்வேத சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவில் கோட்டாறில் உள்ள அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் வருகிற திங்கள்கிழமை முதல் (அக். 19) கரோனா ஆயுா்வேத சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது.
கரோனா தொற்றுக்கு ஆயுா்வேத சிகிச்சை பெற விருப்பமுடையோா், தங்கள் விருப்பத்தை தெரிவித்து இங்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.