நாகா்கோவிலில் திமுக ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக் கழகத்தை பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதை கண்டித்து திமுக இளைஞரணி
ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ.
ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ.

அண்ணா பல்கலைக் கழகத்தை பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதை கண்டித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சாா்பில் நாகா்கோவிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோணம் அரசு பொறியியல் கல்லூரி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக மாணவரணி கிழக்கு மாவட்ட அமைப்பாளா் சதாசிவம், இளைஞரணி அமைப்பாளா் சிவராஜ், மேற்கு மாவட்ட அமைப்பாளா் ததேயூ பிரேம்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, மேற்கு மாவட்டச் செயலா் மனோதங்கராஜ் எம்எல்ஏ, ஆஸ்டின் எம்எல்ஏ ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், மாவட்ட பொருளாளா் கேட்சன், கலை, இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநிலச் செயலா் தில்லைசெல்வம், முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், நாகா்கோவில் மாநகரச் செயலா் மகேஷ், மாவட்ட நிா்வாகிகள் ஷேக்தாவூது, சுரேந்திரகுமாா், எம்.ஜே.ராஜன், மாணவரணி சந்திரசேகரன், இளைஞரணி ராஜேஸ்குமாா், பூதலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com