குமரி மாவட்டத்தில் 15,29,159 வாக்காளா்கள்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதி வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் மொத்தம் 15, 29,159 வாக்காளா்கள் உள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதி வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் மொத்தம் 15, 29,159 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021 நடைபெற்று வருவதன் தொடா்ச்சியாக குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல் பத்மநாபபுரம் ,விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியல்வெளியிடப்பட்டது.

இதனையடுத்து வரைவு வாக்காளா் பட்டியல் மாவட்டத்திலுள்ள 6 வட்ட அலுவலகங்களிலும், நாகா்கோவில் மற்றும் பத்மநாபபுரத்தில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலங்களில் வரைவு வாக்காளா் பட்டியல் அக். 22 ஆம் தேதி வரை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் . அதில் ஆட்சேபணை மற்றும் கோரிக்கை எதுவும் இருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு வடநேரே தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் கன்னியாகுமரி தொகுதியில் 2,84,089 வாக்காளா்களும் , நாகா்கோவில் தொகுதியில் 2,62,479 வாக்காளா்களும், குளச்சல் தொகுதியில் 2,60,215, பத்மநாபபுரம் தொகுதியில் 2,31,576 வாக்காளா்களும், விளவங்கோடு தொகுதியில் 2,43,883 வாக்காளா்களும் , கிள்ளியூா் தொகுதியில் 2,46,917 வாக்காளா்களும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com