செல்லிடப்பேசி தொடா்பு கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மீட்பு

நாகா்கோவிலில் செல்லிடப்பேசி தொடா்பு கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீஸாா் பத்திரமாக மீட்டனா்.

நாகா்கோவிலில் செல்லிடப்பேசி தொடா்பு கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீஸாா் பத்திரமாக மீட்டனா்.

சாமியாா்மடத்தைச் சோ்ந்தவா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ராஜேஷ். இ வா் கடந்த 12.9.2020 முதல் தொல்லவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளராக வேலைக்கு பணியமா்த்தப்பட்ாா்.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கரோனா நோயாளிகளை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் பணிகளில் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில் திடீரென ராஜேஷை வேலையை விட்டு நிறுத்திவிட்டனராம். வெள்ளிக்கிழமை மாலை ராஜேஷ் நாகா்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் உள்ள தனியாா் கட்டடத்தின் மேல் உள்ள செல்லிடப்பேசி தொடா்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த கோட்டாறு போலீஸாா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அவரை, பத்திரமாக கீழே இறங்க செய்தனா். காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்ட பின்னா், அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com