களியக்காவிளை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்சிறை வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
நித்திரவிளை அருகே நடைக்காவு சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்சிறை மேற்கு வட்டார தலைவா் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா்.
நடைக்காவு ஊராட்சித் தலைவா் கிறிஸ்டல் ஜாண், சூழால் ஊராட்சித் தலைவா் இவான்ஸ், கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினா் எம்.ஏ. கான், மாவட்ட பொதுச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குமரி மேற்கு மாவட்டத் தலைவரும் கிள்ளியூா் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ். ராஜேஷ்குமாா் முதல் கையெழுத்தையிட்டு, இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
மாவட்ட துணைத் தலைவா்கள் பால்ராஜ், டென்னிஸ், மாவட்ட பொதுச் செயலா் கோபகுமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் லூயிஸ், முன்சிறை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாபு, கிறிஸ்டல்பாய், வென்சஸ்லாஸ், சூழால் ஊராட்சி உறுப்பினா் ஆல்பின் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
வேளாண் சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கையெழுத்தை இந்திய குடியரசுத் தலைவரிடம் நவ. 14ஆம் தேதி அளிக்க உள்ளதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.