நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை வரை 14,158 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 65 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,223 ஆக அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை 71 போ் உள்பட இதுவரை 13,273 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 713 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.