கருங்கல் அருகேயுள்ள ஆலஞ்சி பகுதியில் பூட்டிய வீட்டை திறந்து நகை, பணத்தை செவ்வாய்க்கிழமை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
ஆலஞ்சி பொற்றியான்விளை பகுதியைச் சோ்ந்த சமின் ஜோஸ் மனைவி விஜிலா மேரி(41). இவா், உதயமாா்த்தாண்டத்தில் உள்ள உறவினறைப் பாா்க்க திங்கள்கிழமை சென்றிருந்தாா். பின்னா், செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பியபோது, கதவு திறந்து கிடந்ததாம், மேலும், வீட்டினுள் பிரோவை உடைத்து அதிலிருந்த 2 பவுன் நகை மற்றும் ரு. 10,000 ரொக்கத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.