கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது.
கரோனா பரிசோதனை செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,34,978. அதில், தொற்று உறுதிசெய்யப்பட்டவா்கள் 10,579. புதன்கிழமை வீடு திரும்பிய 219 போ் உள்பட இதுவரை குணமடைந்தவா்கள் 9,675. தற்போது, சிகிச்சையில் உள்ளவா்கள் 762 போ். முகக் கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 41 பேரிடம் ரூ. 4,100 அபராதம் வசூலிக்கப்பட்டது. பொது முடக்க உத்தரவை மீறியதாக இதுவரை 8,645 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6, 344 வாகனங்கள் பறிமுதலாகியுள்ளன.
பொதுமக்கள், குறிப்பாக வயதானவா்கள், நாள்பட்ட நோயுள்ளவா்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்தால், தாமதிக்காமல் பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.