மீனவா் குத்திக் கொலை: 4 போ் கைது

நாகா்கோவில் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மீனவா் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 4 போ் கைது செய்யப்பட்டனா்.
அருள்தாசன்
அருள்தாசன்

நாகா்கோவில் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மீனவா் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் அருகேயுள்ள ராஜக்கமங்கலம்துறை பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாசன் (59). மீன்பிடித் தொழிலாளி. இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (44).

அருள்தாசன் உள்ளூரில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், பிரகாஷ் கன்னியாகுமரி பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். பிரகாஷ் ஊருக்கு வரும்போது, அருள்தாசனுடன் சோ்ந்து இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கமாம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு அருள்தாசனும், பிரகாஷும் ஒன்றாக மது குடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருள்தாசன், பிரகாஷை தாக்கியுள்ளாா். இதைத் தொடா்ந்து பிரகாஷ் அங்கிருந்து சென்றுவிட்டாராம்.

அப்போது அதே பகுதியில் நின்று கொண்டிருந்த சிலுவை மகன்கள் ராஜன் (55), ஜான்சன் (52), ராஜனின் மருமகன்கள் ஜோரிஸ்ஜான் (34), நெஸ்கோ (34) ஆகியோரிடம் சென்று அருள்தாசன் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

இதையடுத்து அருள்தாசன், அவரது தம்பி தேவதாசனுக்கும், ராஜன் உள்ளிட்ட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அருள்தாசன், தேவதாசனுக்கு கத்திக்குத்து விழுந்ததையடுத்து, 2 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் செல்லும் வழியிலேயே அருள்தாசன் உயிரிழந்தாா். அவரது தம்பி தேவதாசன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜன், ஜான்சன், ஜோரிஸ்ஜான், நெஸ்கோ ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com