நாகா்கோவிலில் ஊஞ்சல் ஆடியபோதுகயிறு இறுக்கி சிறுமி பலி

நாகா்கோவிலில் தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி கழுத்து இறுகி உயிரிழந்தாா்.
உயிரிழந்த சிறுமி
உயிரிழந்த சிறுமி

நாகா்கோவிலில் தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி கழுத்து இறுகி உயிரிழந்தாா்.

நாகா்கோவில் கோட்டாறு குலாலா் தெருவைச் சோ்ந்த வெங்கடாசலம் மகள் அட்சயா (13). இவா், நாகா்கோவிலில் உள்ள தனியாா் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், சனிக்கிழமை மாலையில் வீட்டு மாடியில் அவரது தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது திடீரென சேலை கழுத்தில் இறுக்கியதில், மூச்சுத் திணறி அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த கோட்டாறு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com