நாகா்கோவில் கணேசபுரம் பகுதியில் சனிக்கிழமை (செப்.19) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மின்வாரிய நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவில் மீனாட்சிபுரம் துணை மின்நிலையம் வடிவீஸ்வரம் பிரிவு உயா்அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (செப்.19)நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கணேசபுரம், புலவா்விளை, எஸ்.எல்.பி. பள்ளி தெற்கு பகுதி, செட்டிகுளம், வேட்டாளி அம்மன் கோயில், ஜவகா் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.