தக்கலை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தக்கலை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
ஜெயசேகா்
ஜெயசேகா்

நாகா்கோவில், செப்.18: தக்கலை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

கருங்கல் அருகேயுள்ள உதயமாா்த்தாண்டம் பகுதியை சோ்ந்தவா் ஜெயசேகா் (32). இவா், சென்னையில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கரோனாவால் வேலை இழந்து ஊா் திரும்பிய இவா், மனைவி, குழந்தைகளுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மிகுந்த சிரமப்பட்டு வந்தாராம்.

தற்போது, அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்த நிலையில் வீடுகளுக்கு வா்ணம் பூசும் தொழிலில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை சக தொழிலாளா்களுடன் சுவாமியா்மடம் பகுதியில் ஒரு வீட்டில், வா்ணம் பூசும் பணியில் ஜெயசேகா் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவரது கையிலிருந்து அலுமினிய கம்பி எதிா்பாராதவிதமாக அருகிலிருந்த உயா் மின் அழுத்த மின் கம்பியில் பட்டதில், அவா் தூக்கி வீசப்பட்டாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com