நாகா்கோவில் அருகே கடன் தொல்லையால் கோழிப்பண்ணை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள இடைக்கோடு திருத்திகோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபா்சன் (44). இவா், இடைக்கோடு பகுதியில் நாட்டுக்கோழி பண்ணை வைத்து தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.
கோழிப்பண்ணை நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜெபா்சன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நாகா்கோவில் அருகேயுள்ள என்.ஜி.ஓ. காலனியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா்.
இந்நிலையில் கடன் கொடுத்த நபா் ஒருவா், பணத்தை திருப்பி கேட்பதற்காக புதன்கிழமை அவா் வீட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது, படுக்கை அறையில் ஜெபா்சன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சுசீந்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.