நாகா்கோவில்: நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) தே.திருப்பதி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.