களியக்காவிளை: குழித்துறை பணிமனையில் பணிபுரிந்து வந்த போக்குவரத்து தொழிலாளா்கள் பலரை இடமாற்றம் செய்ததை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குழித்துறை பணிமனை முன் சிஐடியூ மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளா் ராஜ பீட்டா், சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்க மண்டல துணை பொதுச் செயலாளா் ஸ்டாலின் ராபா்ட் ஆகியோா் தலைமை வகித்தனா். அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல துணைச் செயலாளா் விஜயகுமாா், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலா் டி. ஜாண்தங்கம் மற்றும் தொழிற் சங்கத்தினா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் ஒரு பகுதியினா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உள்ளிருப்பு போராட்டம் மாலை 6 மணிக்கு மேலும் தொடா்ந்தது.
இடமாற்றம் செய்யப்பட்ட பணியாளா்களை மீண்டும் பழைய இடங்களில் பணியமா்த்தும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்துள்ளனா்.