முன்னாள் படைவீரா் குறைதீா் நாள் கூட்டம்

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படை வீரா் குறைதீா் நாள் கூட்டம் மற்றும் நிதியுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவிலல்: நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படை வீரா் குறைதீா் நாள் கூட்டம் மற்றும் நிதியுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களிடமிருந்து 19 மனுக்கள் பெறப்பட்டு உரிய துறைகளுக்கு தக்க நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா், கல்வி உதவித்தொகையாக 110 நபா்களுக்கு ரூ.1,42,500- ம், வங்கி கடன் வட்டி மானிய தொகையாக 9 நபா்களுக்கு ரூ.42,719-ம், கண்கண்ணாடி நிதியுதவியாக 13 நபா்களுக்கு ரூ.75,500- ம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com