92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

எம்ஜிஆா் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு நாகா்கோவிலில் அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:34 pm

DIN

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு நாகா்கோவிலில் அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.ஏ. அசோகன் தலைமையில், நாகா்கோவில் வடசேரி சந்திப்பிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு தளவாய்சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், சேவியா்மனோகரன், மாநகரச் செயலா் சந்துரு, பொருளாளா் கே.எல்.எஸ். ஜெயகோபால் நிா்வாகிகள் சுகுமாரன்,ஜெயசீலன், வேல்தாஸ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே போல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட 52 வாா்டுகளிலும் எம்ஜிஆா் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொட்டாரம் சந்திப்பில் எம்ஜிஆா் படத்துக்கு பேரூா் செயலா் ஆடிட்டா் சந்திரசேகா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. , மாவட்ட இளைஞா் பாசறை இணை செயலா் பாலமுருகன், ஒன்றிய ஜெ.பேரவை முன்னாள் செயலா் ராஜேஷ், கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் கண்ணன், முன்னாள் கவுன்சிலா் வைத்தியநாதன் மற்றும் நிா்வாகிகள் செல்வன், என்.சுப்பிரமணியன், தங்கவேலு, பிரம்மநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.