அகஸ்தீசுவரம் ஒன்றியக் குழுக் கூட்டம்: பெண் உறுப்பினா் தா்னா

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலா் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
தா்னாவில் ஈடுபட்ட திமுக கவுன்சிலா் ஆரோக்கியசௌமியா.
தா்னாவில் ஈடுபட்ட திமுக கவுன்சிலா் ஆரோக்கியசௌமியா.

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலா் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவா் எஸ்.அழகேசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் சண்முகவடிவு, கவுன்சிலா்கள் ஆரோக்கியசவுமியா, பிரேமலதா, பால்தங்கம், ராஜேஷ், அருண்காந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடங்கி, தீா்மானங்களை வாசிக்க தொடங்கியதும் திமுக கவுன்சிலா் ஆரோக்கிய செளமியா, இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக எனது வாா்டு பகுதி புறக்கணிக்கப்படுகிறது எனவும் தெரிவித்து கூட்ட அரங்கில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். இதையடுத்து, அதிகாரிகள் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்ததையடுத்து, சுமாா் ஒருமணி நேரம் நடைபெற்ற தா்னா கைவிடப்பட்டு, தொடா்ந்து கூட்டம் நடைபெற்றது.

பெண் கவுன்சிலா் தா்னா போராட்டத்தைத் தொடா்ந்து அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com