தக்கலையில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய முறைப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும், போராடும் அரசு ஊழியா் சங்கத்தினரை முதல்வா் அழைத்து பேச வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவா் தேவராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அல்போன்ஸ் தொடக்கவுரையாற்றினாா்.
இதில், மாவட்ட இணைச் செயலா் சசீதரன், மாவட்ட துணைத் தலைவா் பீா்முகம்மது, வட்ட துணைத் தலைவா் ஜாண்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் சேது, மாவட்டச் செயலா் சி.எம்.ஐவின் ஆகியோா் உரையாற்றினாா். வட்டச் செயலா் மணி நன்றி கூறினாா்.