கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.
பொதுமேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு ஊழியா் சங்கத் தலைவா் ஜாா்ஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ராஜூ உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தாா். நிா்வாகிகள் ராஜகோபால், செல்வம் உள்ளிட்டோா் கோரிக்கைளை விளக்கி பேசினா்.
பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை வழங்க வேண்டும்; ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று ஊதியம் வழங்க வேண்டும்; ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும்; ஒப்பந்த ஊழியா்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.