களியக்காவிளையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களியக்காவிளை சந்திப்பிலிருந்து மேக்கோடு செல்லும் சாலையில், சாலையோரம் உள்ள உயா் அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பம் அடிப்பகுதி முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
எனவே, இந்த மின்கம்பத்தை அகற்றி, அப்பகுதியில் புதிய மின் கம்பம் அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.