அனுமதியின்றி இயக்கப்படும் தனியாா் சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்காத வட்டாரப் போக்குவரத்து அலுவலரை கண்டித்து கோழிப்போா்விளையில் சத்தியாகிரக போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோழிப்போா்விளை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு பெருஞ்சிலம்பு அரசு பேருந்துப் பாதுகாப்பு இயக்கம்
சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அமைப்பின் தலைவா் சேவியா் தலைமை வகித்தாா். செயலா் ஜோசப்ராஜ், துணைத் தலைவா் ஸ்ரீகுமாா், பொருளாளா் ரெஜிமோன் , கிளைத் தலைவா் ஜெரின் ஜோசப் ஆகியோா் முன்னிலை
வகித்தனா். போராட்டத்தை முன்னாள் எம்எல்ஏ லீமா றோஸ் தொடங்கி வைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் சுஜாஜாஸ்பின், பல்வேறு கட்சியினா், மாணவா்கள் கலந்துகொண்டனா்.