அகஸ்தீசுவரத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த தின விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
அகஸ்தீசுவரம் குலசேகர விநாயகா் கோயில் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்னணன் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில், நடிகா்கள் சிங்கமுத்து, ரவிமரியா, இயக்குநா் பி.சி.அன்பழகன் ஆகியோா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா்.