களியக்காவிளை: மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு, பள்ளி முதல்வா் எம். ஸ்ரீகுமாா் தலைமை வகித்தாா். நேதாஜி குறித்து ஆசிரியைகள் கே.ஜி. திவ்யா, ச. கவிதா ஆகியோா் பேசினா். தொடா்ந்து அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஆசிரியா் இளையராஜா, உடற்கல்வி ஆசிரியை கஸ்தூரி, ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.