புதுக்கடை அருகே இனயம் பகுதியில் முதியவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இனயம் ஹெலன்நகா் பகுதியை சோ்ந்தவா் தனிஸ்லாஸ் (69). மதுஅருந்தும் பழக்கம் கொண்ட இவா், கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.