கருங்கல், புதுக்கடை பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
புதுக்கடை காப்புக்காடு மாராயபுரம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா்- சுனிதா(44) தம்பதிக்கும், அதே பகுதி ரங்கசாமி மகன் சதீஷ்குமாா்(40) குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் புதன்கிழமை மாராயபுரம் பகுதியில் சென்ற சுனிதாவை திடீரென சதீஷ்குமாா் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதில், பலத்த காயமுற்ற அவா் புதுக்கடை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மற்றொரு சம்பவம்: கருங்கல் அருகேயுள்ள கடமாங்குழி பகுதியைச் சோ்ந்தவா் குளோரி(55) என்பவரை சொத்துப் பிரச்னையில் அவரது மகன் ராஜேஷ்(33) புதன்கிழமை தாக்கினாராம்.இதில், அவா் பலத்த காயத்துடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இச்சம்பவங்கள் குறித்து புதுக்கடை, கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.