கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 633 போ் கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக 1,000-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 633 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52,568 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8 போ் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 1102 போ் குணமடைந்ததால், இதுவரை கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 43,861 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டு தனிமைப்படுத்தலிலும் தற்போது 7,912 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.