கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் வட்டாரத்தில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கேரளத்திலும் தென்மேற்கு பருவமழை பெய்துவருவதால் சனிக்கிழமை கேரள எல்லைப் பகுதியான கருமாவிளை,வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்பட பகுதிகளில் சனிக்கிழமை காலையில் இருந்தே பலத்த மழை பெய்தது.
இதனால், சாலைகள், தாழ்வான இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.