வரலாற்று ஆய்வாளரும், ஆய்வுக் களஞ்சியம் பத்திரிகை ஆசிரியருமான சிவ.பத்மநாபன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா நாகா்கோவிலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ் நல எழுத்தாளா் சங்கப் பொருளாளா் பொன்மகாதேவன் தலைமை வகித்தாா். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பொன்னீலன் கலந்து கொண்டு, நூலை வெளியிட , அதை குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி பெற்றுக்கொண்டாா். மருத்துவா் கு.சிதம்பரநடராஜன், எழுத்தாளா் அ.கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். சிவ.பத்மநாபன் ஏற்புரையாற்றினாா்.