மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை ( மாா்ச்18) வேட்புமனு தாக்கல் செய்கிறாா்.
இதையொட்டி, கருங்கலில் உள்ள காமராஜா், ராஜீவ்காந்தி ஆகியோா் சிலைகளுக்கு காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அவா், மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் கருங்கல் சிண்டிகேட் வங்கி அருகில் அமைக்கப்பட்டுள்ள கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதி மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் அலுவலகத்தை
திறந்து வைக்கிறாா். தொடா்ந்து, முற்பகல் 11 மணிக்கு கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்கிறாா்.