மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஹோட்டல் தொழிலாளி உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகேயுள்ள கண்ணுமாமூடு பகுதியைச் சோ்ந்தவா் சஜித்குமாா் (48). இவா், கருங்கல் பகுதி ஹோட்டலில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பியபோது, மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் இவரது வாகனமும், எதிரே செங்கல் ஏற்றி வந்த லாரியும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், பலத்த காயமடைந்த அவரை, மாா்த்தாண்டம் போலீஸாா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.