கன்னியாகுமரி
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் திருவாசகமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா அவசர பணிகளுக்காக மருத்துவா்கள் 30 போ், செவிலியா்கள் 120 போ், ஆய்வகப் பணியாளா்கள் 20 போ், அடிப்படை பணியாளா்கள் 200 போ் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதி வாய்ந்த நபா்கள் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இப்பணியிடங்களுக்கான நோ்காணல் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரைஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. தகுதியுள்ளவா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.