கருங்கல் அருகே உள்ள கம்பிளாா் மாகாதேவா் குளத்தை தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட கம்பிளாா் மாகாதவோ் குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்தை பல ஆண்டுகளாக முறையாக தூா்வாராததால் புல், புதா்கள் நிரம்பி பாசிபடா்ந்து தூா்ந்து காணப்படுகிறது. இதனால், இந்த குளத்தில் மழைக் காலங்களில் மழை நீா் தேக்க முடியாததால் விவசாயிகள் வாழை, தென்னை விவசாயம் செய்ய
முடியாமல் அவதியடைந்துள்ளனா். எனவே, இக் குளத்தை தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.