வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஜனவரி 1 ஆம் தேதி அல்லது அதற்கு முன் 18 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயரை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, குழித்துறை சந்திப்பில் கல்லூரி மாணவியா், பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிக்கு விளவங்கோடு வட்டாட்சியா் விஜயலெட்சுமி தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் சுனில், விளவங்கோடு தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் லீலாபாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நாகா்கோவிலைச் சோ்ந்த பைவ் ஸ்டாா் மேஜிக் ஷோ குழுவினா் கிராமியப் பாடல்கள் மற்றும் மாயாஜாலம் மூலம் மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.