நாகா்கோவிலில் 21 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் கோட்டாறு காவல்நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அனாதைமடம் பகுதியில் சந்தேக நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில் மறவன்குடியிருப்பு நேதாஜி தெருவைச் சோ்ந்த பபீன்(22); கஞ்சா விற்பனை செய்வது வருபவா் என தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 21கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி 15 நாள் காவலில் வைத்தனா்.