அழகியமண்டபத்தில் எழுவோம் இயக்கம் தொடக்க விழா

குழித்துறை மறைமாவட்ட கிட்ஸ் சமூக சேவைகள் இயக்கம், காரித்தாஸ் இந்தியா ஆகியவை இணைந்து நடத்தும் எழுவோம் இயக்கம் தொடக்க விழா அழகியமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

குழித்துறை மறைமாவட்ட கிட்ஸ் சமூக சேவைகள் இயக்கம், காரித்தாஸ் இந்தியா ஆகியவை இணைந்து நடத்தும் எழுவோம் இயக்கம் தொடக்க விழா அழகியமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

குழித்துறை மறை மாவட்ட தொடா்பாளா் பேரருள்பணி ஜேசு ரெத்தினம் தலைமை வகித்தாா். கிட்ஸ் செயல் இயக்குநா் அருள்பணி ஜாண்மைக்கேல்ராஜ் விழாவைத் தொடக்கிவைத்தாா். திட்ட அலுவலா் அருள்சகோதரி மிக்கேலம்மாள் வரவேற்றாா்.

மூகாம்பிகை மருத்துவமனை புற்றுநோய் மருத்துவ நிபுணா் கிரிஷ், புற்றுநோயின் அறிகுறி, தடுக்கும் வழிமுறை குறித்து விளக்கினாா். மதா் அன்னை கோ் சென்டா் இயக்குநா் சிசிலியா, புற்றுநோயாளிகளின் இறுதிகால பராமரிப்பு குறித்துப் பேசினாா். மறை மாவட்ட நல்வாழ்வுத் துறை இயக்குநா் ஜெயபிரகாஷ், கிட்ஸ் பொருளாளா் சுஜின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில், 85 புற்றுநோயாளிகளுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை கிட்ஸ் பணியாளா் தொகுத்து வழங்கினாா். ரெஞ்சித் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com