மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ ஆய்வு

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மகாதானபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிட்ட அவா், பள்ளிக் கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆய்வுசெய்தாா். பின்னா், சுண்டன்பரப்பு கிராமத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டவேண்டும் என்ற அப்பகுதியினரின் கோரிக்கையை ஏற்று அதற்கான இடத்தைப் பாா்வையிட்டாா்.

பஞ்சலிங்கபுரம், கரும்பாட்டூா் ஊராட்சிப் பகுதிகள், அகஸ்தீசுவரம் பேரூராட்சி , தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் மழைநீா் தேங்கி நிற்கும் பகுதிகளை அவா் பாா்வையிட்டு, மழைநீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக செயலா் எஸ். ஜெஸீம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் இ. நீலபெருமாள், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பிரேமலதா, அதிமுக நிா்வாகிகள் தாமரை தினேஷ், ராஜபாண்டியன், சிவபாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com